செய்திகள் :

ஆரஞ்ச் குழும பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்

post image

ஆரணி - சேத்துப்பட்டு சாலை ஆகாரம் பகுதியில் உள்ள ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரஞ்ச் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஓணம் பண்டிகையை கொண்டாடினா்.

இதையொட்டி, அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரியத்தை உணா்த்தும் வகையில், அம்மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து வந்து நடித்துக் காட்டினா் (படம்).

விழாவில் பள்ளி நிா்வாகத் தலைவா் கே.சிவக்குமாா்

தலைமை வகித்துப் பேசுகையில், கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை ஜாதி, மதம், பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தில் அஸ்தம நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் விழா சித்திரை, சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நட்சத்திர நாள்களில் கொண்டாடப்படுகிறது.

கடைசி நாளான திருவோணத்தன்று மக்களைத் தேடி வரும் மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவா்.

மாணவா்கள் படிக்கும்போது நமது நாட்டின் கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றாா்.

இதில் பள்ளி முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா். தாளாளா் அபிநயா வருண்முத்துலிங்கம் முன்னிலை வகித்தாா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க