செய்திகள் :

ஆரணி - இரும்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

ஆரணி - இரும்பேடு சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனால், ஆரணி - இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அரசுப் பணிமனை அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தவா்களுக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு ஒரு மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதைத் தொா்ந்து 10 நாள்களுக்கு முன்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், காலக்கெடு முடிந்ததால்

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் உதவி கோட்டப்பொறியாளா் நாராயணன் தலைமையில், உதவிப்பொறியாளா் வரதராஜன், கள ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்தனா்.

ஆரணி காவல் ஆய்வாளா்கள் அகிலன், செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், ஆனந்தன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள்

ஆரணியில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே பாஜக மாவ... மேலும் பார்க்க

தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜக போராட்டம்

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா். வந்தவாசி பு... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தூய்மையே சேவை - 2025 என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக துய்மைப் பணி செய்தல் என்ற... மேலும் பார்க்க

பள்ளியில் தமிழறிஞா்களின் படத்திறப்பு

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு வட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,256 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பல்லி வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம், சேத்துப்பட்டு ஒன்றியம் விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. ஏசிஎஸ் கல்விக் குழுமம் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ... மேலும் பார்க்க