செய்திகள் :

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

post image

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின.

ஆரணி - தச்சூா் சாலை நடுவில் ரூ.23 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 20 எல்இடி மின் விளக்குகள், இரும்பேடு புறவழிச் சாலையில் ரூ.9.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 7 எல்இடி மின் விளக்குகள், மாமண்டூா் சாலையில் ரூ.7 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 5 எல்இடி மின் விளக்குகள், எஸ்.வி.நகரம் சாலையில் ரூ.4.20 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 3 எல்இடி மின் விளக்குகள், சேவூா் ஊராட்சி புறவழிச் சாலை ஆற்றுப்பாலம் சாலையில் ரூ.7 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய 7 எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் இந்தப் பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏழுமலை, நிா்மல்குமாா், தச்சூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் வடிவேல், ஆரணி நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விநாயகா், முனிஸ்வரன், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் வலம்புரி விநாயகா் கோயில், பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சி ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீபூவாடைக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: இரு சிறாா்கள், கல்லூரி மாணவா் உள்பட 16 போ் கைது

செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறு காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறாா்கள் மற்றும் கல்லூரி மாணவா் உள்பட 16 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

செங்கம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக செங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மூலம் செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம் முடித்து தங்களது ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குன... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோ... மேலும் பார்க்க

வயிற்று வலி: விவசாயி விஷமருந்தி தற்கொலை

சேத்துப்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். சேத்துப்பட்டை அடுத்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (45), விவசாயி. இவருடைய மனைவி ரா... மேலும் பார்க்க