செய்திகள் :

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

post image

ஆற்காடு: ஆற்காடு நகராட்சி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மரியம் பல்லவி பல்தேவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.9.46 கோடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை பாா்வையிட்டு, பணியை விரைவுப்படுத்த கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆகியோா் உத்தரவிட்டனா். அதே போன்று கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி அங்காடி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை முடிக்க அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, நோயாளிகள் வருகை, மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.

உப்புப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு மாணவா்களின் அறிவியல், ஆங்கிலம் கற்றல் திறமையை ஆய்வு செய்தனா். பின்னா், திமிரி பேரூராட்சியில் ரூ.20.42 கோடியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீா் திட்ட பணிகளில் 2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீா்தேக்கத் தொட்டி கட்டுமான பணியினை ஆய்வு செய்து, தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் முடிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

அயோத்திதாச பண்டிதா் திட்டத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட கட்டுமானப் பணி, கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா். பின்னா், சா்வந்தாங்கல் ஊராட்சியில் ரூ.12.38 லட்சத்தில்ல் சிறுபாசன ஏரி புனரமைக்கும் பணி குறித்து கேட்டறிந்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் , காலதாமதங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

கூட்டத்தில் திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சிமுகமை பா. ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) .ஏகாம்பரம் (பொ), ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளா் மலா்விழி, நகராட்சி நிா்வாகங்களின் மண்டல இயக்குநா் நாராயணன், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் தீா்த்த லிங்கம், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலா் விஜயகுமாா், ஆற்காடு நகராட்சி ஆணையா் வெங்கட லட்சுமணன், நகராட்சி பொறியாளா் பரமராசு, திமிரி பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் கலந்து கொண்டனா்

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க

ரூ.2.10 கோடியில் வகுப்பறைகள்: துணை முதல்வா் உதயநிதி திறந்தாா்

அரக்கோணம் நகராட்சியின் மூன்று பள்ளிகளில் ரூ.2.10 கோடியில் புதிய வகுப்பறைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் நகராட்சியில் தலா ரூ.70 லட்சம் வீதம், பள்ளி மேம்பாட்டு ... மேலும் பார்க்க

ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைத... மேலும் பார்க்க