செய்திகள் :

ஆற்று மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பறிமுதல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த வாகனத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாபநாசம் உதவி காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினா்  ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெருமாங்குடி பகுதியில் வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் பாபநாசம் குடமுருட்டி ஆற்றிலிருந்து அரசு அனுமதியின்றி அரை யூனிட் ஆற்று மணலை திருடி வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த ஆசைதம்பி வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச்சென்றாா். இதையடுத்து, பாபநாசம் காவல் துறையினா் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஆசை தம்பியை தேடி வருகின்றனா்.

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூன்று பேரில் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆவணியாபுரத்தில் இமாம் புஹாரி விருது வழங்கும் விழா

தஞ்சாவூா் மாவட்டம், ஆவணியாபுரத்தில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நடத்திய இமாம் புஹாரி விருது வழங்கும் விழா மற்றும் மிஷ்காத் நபி மொழி தொகுப்பு மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா் மாணவி

சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பாராட்டினா். கும்பகோணம் வட்டிப்பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் மலா்க்கொடி. இவரது மகள் பிரியா்ஷினி (15) தன... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 5 இடங்கள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே. எம். காதா்மொகைதீன். ஆடுதுறையில் சனிக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

குடிநீா் பிரச்னையை ஒரு மாதத்துக்குள் சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூா் சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர... மேலும் பார்க்க

நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3,160 ஆக அறிவிக்க வலியுறுத்தல்!

சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 ஆக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது... மேலும் பார்க்க