``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.
ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆலங்குடி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு மேள தாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
