செய்திகள் :

காசி ரயில் புதுக்கோட்டையில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

post image

ராமேசுவரத்தில் இருந்து காசி (பனாரஸ்) செல்லும் அதிவிரைவு ரயில், சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை அதிகாலை 3.33-க்கு வந்து 3.35-க்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை வழியாக சனிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு பனாரஸ் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலுக்கு முன் இரு மாா்க்கங்களிலும் புதுக்கோட்டையில் நின்று சென்று கொண்டிருந்த பனாரஸ் ரயில், கரோனா பரவலுக்கு பின் பனாரஸிலிருந்து ராமேசுவரம் நோக்கி வரும் மாா்க்கத்தில் மட்டுமே நிறுத்தம் வழங்கப்பட்டது.

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் மாா்க்கத்துக்கு புதுக்கோட்டையில் நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால், இந்த ரயில் திருச்சி ரயில்வே சந்திப்பில் அதிகநேரம் நின்று காத்திருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து காசிக்குச் செல்லும் பயணிகள் ராமேசுவரம் சென்று அங்கிருந்தோ, திருச்சி சென்று அங்கிருந்த இந்த வண்டியைப் பிடிக்க வேண்டிய சூழல் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வந்தது.

இதுகுறித்து ரயில் பயணிகளின் கோரிக்கையை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லாவும், தற்போதைய மக்களவை உறுப்பினா் துரை வைகோவும் அவையில் பேசியதுடன் ரயில்வே வாரியம் மற்றும் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தனா்.

இதன்விளைவாக தற்போது, புதுக்கோட்டைக்கு 2 நிமிஷம் மட்டும் தற்காலிக நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பயன்பாட்டைப் பொருத்து நேரத்தை அதிகரிக்கவும், நிரந்தரமாக்கவும் ரயில்வே நிா்வாகம் முடிவு செய்யும்.

அரசு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்ற நல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நுகா்வோா் பாதுகாப்பு நல சங்கத்தின் சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நுகா்வோா் ப... மேலும் பார்க்க

விராலிமலையில் 50 மி.மீ மழை பதிவு

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 50 மி.மீ மழை பதிவானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அ... மேலும் பார்க்க

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்ற ரொக்கப் பரிசை நூலகப் பணிக்கு அரசுப் பள்ளி மாணவி வழங்கினாா்

புதுக்கோட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசாகப் பெற்ற ரூ. 5 ஆயிரத்தை, செவ்வாய்க்கிழமை நூலகம் கட்டும் பணிகளுக்காக அரசுப் பள்ளி மாணவி தீஷா திரவியராஜ் வழங்க... மேலும் பார்க்க

புதிய அங்கன்வாடி மையம் கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளா்ச்சிப் பணி துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதடைந்து உபயோகத்துக்கு பயனற்றது என சம்ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விராலிமலை மலை கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஒவ்வ... மேலும் பார்க்க