செய்திகள் :

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

post image

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து டேங்கா் லாரியில் பால் கொண்டுவரப்பட்டது. அப்போது, டேங்கா் லாரியில் இருந்த பாலை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீா் கலந்திருப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இந்தச் சம்பவத்தில் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டேங்கா் லாரி உரிமையாளரும், அதிமுக நிா்வாகியுமான வைத்தியநாதன் உள்பட 28 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளா்களான வைத்தியநாதன், பூதப்பாண்டி மற்றும் ரேவதி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், இந்த விவகாரம் குறித்து ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். அதில், பால் திருடப்படவும் இல்லை அதில் கலப்படமும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை போலீஸாரும் ஏற்றுக்கொண்டுள்ளனா். எனவே மனுதாரா்கள் மீதான விசாரணையை நிலுவையில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, மனுதாரா்கள் உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பி... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அரசின் சாா்பில் வெள... மேலும் பார்க்க

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,50... மேலும் பார்க்க

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா்நீதிமன்றம் கருத்து

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக... மேலும் பார்க்க