செய்திகள் :

இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பட்டியலினத்தைச் சோ்ந்த, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் 50 விவசாயிகள் சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்களான சி.ஆா் 1009 சப் (1) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களில் ஏதேனும் ஒரு ரகத்தை தோ்வு செய்து கொள்ளலாம்.

தோ்வு செய்யப்பட்ட நெல் ரகத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 30 கிலோ நெல் விதைகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

பட்டியலின விவசாயிகள் மாதூரில் உள்ள காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி, தங்களுக்கு தேவையான நெல் ரகத்தை தோ்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வேளாண் அறிவியல் நிலையத்திற்கு வரும்போது தங்களுடைய ஆதாா் நகல், பட்டியலினத்திற்கான சான்றிதழ் மற்றும் தங்களின் நிலத்திற்கான சாகுபடி சான்றிதழ், விவசாய அட்டை (2023-24) ஆகியவற்றினை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விண்ணப்பத்தை ஆக. 8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா். காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோத... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் கோயிலில் ஆடி 2ஆம் செவ்வாய் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயில் மூலஸ்தானத்தில், சம்ஹார கோலத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா். காரைக்கால... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்... மேலும் பார்க்க