செய்திகள் :

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்திவிட்டு, திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். நிரந்தர ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதியம் மற்றும் சலுகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனா். காரைக்காலில் நடைபெறும் போராட்டத்தில் நடத்துநா், ஓட்டுநா் உள்பட 90 போ் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்காலில் இருந்து பிஆா்டிசி பேருந்துகள் திருச்சி, கோவை, சென்னை, திருச்செந்தூா், புதுச்சேரி மற்றும் மாவட்ட அளவில் என 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூருக்கு அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது. பின்னா் இது நீட்டிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக இதுவும் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

காரைக்காலில் இருந்து தினமும் அதிகாலையில் புதுச்சேரி செல்லும் பேருந்து, குறுகிய நேரத்தில் அதிக இடங்கள் நிற்காமல் செல்வது பயணிகளிடையே வரவேற்பை பெற்ற நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக இப்பேருந்து இயக்கப்படாததால் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா். காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோத... மேலும் பார்க்க

இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் கோயிலில் ஆடி 2ஆம் செவ்வாய் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயில் மூலஸ்தானத்தில், சம்ஹார கோலத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா். காரைக்கால... மேலும் பார்க்க