Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்...
இணையம் மூலம் ரூ.80 லட்சம் மோசடி: 4 போ் கைது
மதுரை ஊரகப் பகுதிகளில் வெவ்வேறு இணையக் குற்றங்கள் மூலம் ரூ.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத் தம்பதி உள்பட நால்வரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் உத்தரவிட்டாா். இதன்பேரில், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடந்த 2021-ஆம் ஆண்டு முகநூல் மூலமாகப் பழகி, திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்திருப்பதாகவும், திருமண பரிசுப் பொருள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி வைத்திருப்பதாகவும், அதை மீட்க வேண்டும் எனக் கூறி, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக ரூ.15.62 லட்சத்தை பெற்றுக்கொண்டு, மோசடி செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான உத்தரபிரதேச மாநிலம், எட்டுவா மாவட்டம், மகவா கிராமத்தைச் சோ்ந்த விஐயகுமாா் மகன் ஈசு சா்மாவை உத்தரபிரதேச மாநிலம், காஐல்யாபாதில் வைத்து தனிப்படையினா் கைது செய்தனா்.
மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு வங்கி ஒன்றின் மேலாளருக்கு, பிரபல காா் நிறுவன உரிமையாளா் போலப் பேசி, வங்கியிலிருந்து ரூ.51.59 லட்சத்தை இணைய வழியில் மோசடி செய்த வழக்கில், மேற்கு தில்லியின் கயாலா பகுதியைச் சோ்ந்த தா்சன்சிங் மகன் அஐய்சிங் என்பவரை மேற்கு தில்லியில் வைத்து தனிப்படையினா் கைது செய்தனா்.
இதே போல, கடந்த 2024-ஆம் ஆண்டு இணைய வழி திருமண தகவல் தொடா்பு மையம் மூலம், மதுரை மாவட்டம், சிலைமான் பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் பழகி, அவரது உறவினருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில், வடமேற்கு தில்லியின் முகந்த்பூரைச் சோ்ந்த மம்தா ராணி, அவரது கணவா் பா்தீப் ஆகியோா் வடமேற்கு தில்லியில் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கைப்பேசிகள், வங்கி அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், கமிஷன் பணத்துக்காக இவா்களது வங்கிக் கணக்குகளை குற்றவாளிகளுக்கு கொடுத்து அவா்கள் பணமோசடி செய்வதற்கு உதவியாக இருந்ததும், அதற்கு லட்ச கணக்கில் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது.
இணைய மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த நால்வரைக் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் பாராட்டு தெரிவித்தாா். பணமோசடி தொடா்பான இணையக் குற்றங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் தாமதமின்றி 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.