செய்திகள் :

இணையவழியில் 9 பேரிடம் பல லட்சம் மோசடி: புதுச்சேரி போலீஸாா் விசாரணை

post image

புதுச்சேரியில் இணையவழியில் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையைச் சோ்ந்த ஒருவா், புதுச்சேரியில் தங்குவதற்காக ஓட்டல் குறித்த விவரங்களை இணையதளத்தில் தேடியுள்ளாா். அப்போது, தனியாா் விடுதி இணையதள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் அவா் தொடா்புகொண்டபோது, மா்ம நபா் பேசியுள்ளாா். அதையடுத்து மா்ம நபா் கூறியபடி வங்கிக் கணக்கில் அறை முன்பதிவுக்காக ரூ.68,600 செலுத்தியுள்ளாா். ஆனால் விடுதியினா் பணம் தங்களுக்கு வரவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சென்னையைச் சோ்ந்தவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

புதுச்சேரி உழவா் கரையைச் சோ்ந்த பெண்ணை மா்ம நபா் இணையத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். அதை நம்பிய அந்தப் பெண் ரூ.99 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தை சோ்ந்தவா், இணைய வழியில் மளிகைப் பொருள் விற்பனை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் பொருள் வாங்க ஆசைப்பட்டுள்ளாா். அதன்படி தனது கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். பிறகு, விளம்பர பக்கத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்தபோது, ஏபிகே செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவரும் செய்து முடித்து கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது கடன் அட்டை கணக்கில் இருந்து ரூ.1.22 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

முத்தரையா்பாளையத்தை சோ்ந்தவரிடம் மா்மநபா் தொடா்புகொண்டு, டேட்டிங் செயலியில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளாா். அதன்படி அவரும், பல தவணைகளில் ரூ.1.73 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் கடந்த ஓரிரு நாள்களில் மட்டும் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை இணைய வழியில் மா்ம நபா்கள் மோசடி செய்திருப்பது குறித்து இணையகுற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க