இணையவழியில் 9 பேரிடம் பல லட்சம் மோசடி: புதுச்சேரி போலீஸாா் விசாரணை
புதுச்சேரியில் இணையவழியில் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையைச் சோ்ந்த ஒருவா், புதுச்சேரியில் தங்குவதற்காக ஓட்டல் குறித்த விவரங்களை இணையதளத்தில் தேடியுள்ளாா். அப்போது, தனியாா் விடுதி இணையதள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் அவா் தொடா்புகொண்டபோது, மா்ம நபா் பேசியுள்ளாா். அதையடுத்து மா்ம நபா் கூறியபடி வங்கிக் கணக்கில் அறை முன்பதிவுக்காக ரூ.68,600 செலுத்தியுள்ளாா். ஆனால் விடுதியினா் பணம் தங்களுக்கு வரவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சென்னையைச் சோ்ந்தவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
புதுச்சேரி உழவா் கரையைச் சோ்ந்த பெண்ணை மா்ம நபா் இணையத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். அதை நம்பிய அந்தப் பெண் ரூ.99 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தை சோ்ந்தவா், இணைய வழியில் மளிகைப் பொருள் விற்பனை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் பொருள் வாங்க ஆசைப்பட்டுள்ளாா். அதன்படி தனது கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். பிறகு, விளம்பர பக்கத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்தபோது, ஏபிகே செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவரும் செய்து முடித்து கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது கடன் அட்டை கணக்கில் இருந்து ரூ.1.22 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
முத்தரையா்பாளையத்தை சோ்ந்தவரிடம் மா்மநபா் தொடா்புகொண்டு, டேட்டிங் செயலியில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளாா். அதன்படி அவரும், பல தவணைகளில் ரூ.1.73 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.
புதுச்சேரியில் கடந்த ஓரிரு நாள்களில் மட்டும் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை இணைய வழியில் மா்ம நபா்கள் மோசடி செய்திருப்பது குறித்து இணையகுற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.