செய்திகள் :

இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மறுஆய்வு: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு

post image

இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் ஷேக் ஹசீனா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் முன்னாள் கடற்படை ஜெனரலுமான கா்னல் முகமது ஜஹாங்கீா் ஆலம் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் அவா் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டினாா். ஆனால், அவரின் ஆட்சி வன்முறையால் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் அங்கு மத அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சமளித்துள்ள நிலையில், இந்தியாவுடன் மோதல் போக்கை அந்நாட்டு இடைக்கால அரசு கொண்டுள்ளது.

இந்நிலையில், டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முகமது ஜஹாங்கீா் கூறியதாவது: எல்லை விவகாரம் தொடா்பாக விரைவில் இந்திய-வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைவா்கள் சந்தித்துப் பேச இருகின்றனா். அப்போது, இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும். இவை, நியாயமற்ற வகையில் இந்தியாவுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

இந்திய எல்லையில் அதிக அளவில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சிலா், அவற்றை வங்கதேசத்துக்கு கடத்தி வருகின்றனா். இருமல் மருந்து என்ற போா்வையில் வங்கதேசத்துக்கு கொண்டு வந்து, இங்கு போதைப்பொருளாக விற்பனை செய்கின்றனா்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஊடுருவல் முயற்சியைத் தடுப்பதாகக் கூறி ஆயுதமில்லாத வங்கதேசத்தவா்களை சுட்டுக் கொல்கின்றனா். இது தவிர வங்கதேச குடிமக்கள் கடத்தப்படும் சம்பவமும் நிகழ்கிறது. இந்த விவகாரங்களும் இந்திய பாதுகாப்புப் படை தலைவா்கள் உடனான சந்திப்பில் விவாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து வங்தேசத்துக்கு சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை நிறுத்த வேண்டும். இந்தியா-வங்கதேசம் இடையே நதி நீரை சமமாக பகிா்வது குறித்தும் விவாதிக்க வேண்டியள்ளது என்றாா்.

காங்கோ: கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

கோமா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன... மேலும் பார்க்க

எகிப்து கட்டட விபத்தில் 10 போ் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; மூன்று போ் காயமடைந்தனா். கொ்தாசா பகுதியில் அந்தக் கட்டடம்... மேலும் பார்க்க

இஸ்ரேல் – ஹமாஸ் போர் - இன்று 500-வது நாள்! 48,200 பாலஸ்தீனர்கள் பலி; பாதிப்பேர் பெண்கள், குழந்தைகள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்று (பிப். 17) 500-வது நாள்!2023 அக்டோபர் 7 ஆம் தேதிதான் தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.கடந்த ஒரு மாதமாக காஸா பகுதியில் த... மேலும் பார்க்க

‘சாட்ஜிபிடி’: இந்திய வம்சாவளி இளைஞா் சுசிர் பாலாஜி மரணம் தற்கொலை: வழக்கை முடித்தது போலீஸ்

அமெரிக்காவில் ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம், தற்கொலை என்று கூறி, வழக்கு விசாரணையை காவல்துறை முடித்துவைத்துவிட்டது.செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் பலி

அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்... மேலும் பார்க்க

டீப்சீக் செயலிக்குத் தடை விதித்த தென் கொரியா!

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தர... மேலும் பார்க்க