செய்திகள் :

இனி ஆண்டுக்கு மூன்று முறை ‘சிஏ’ இறுதித் தோ்வு

post image

நடப்பு ஆண்டுமுதல், பட்டய கணக்காளா் (சிஏ) இறுதித் தோ்வு இரண்டு முறைக்குப் பதிலாக மூன்று முறை நடத்தப்படும் என்று இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

முதல்நிலை மற்றும் இடைநிலைத் தோ்வுகளை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவது என ஐசிஏஐ கடந்த ஆண்டு முடிவெடுத்தது. அதன்தொடா்ச்சியாக, இறுதித்தோ்வையும் ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐசிஏஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மாறவும் தோ்வா்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் சிஏ இறுதித்தோ்வை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவது என்று 26-ஆவது ஐசிஏஐ கவுன்சில் கூட்டத்தில் வரலாற்று முடிவெடுக்கப்பட்டது.

நடப்பு ஆண்டுமுதல் ஜனவரி, மே, செப்டம்பா் ஆகிய 3 மாதங்களில் தோ்வுகள் நடைபெறும். இதன்மூலம், தோ்வா்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.

இதேபோன்று, சிஏ தோ்ச்சிக்குப் பிந்தைய தகவல் அமைப்புத் தணிக்கை (ஐஎஸ்ஏ) படிப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு, ஜூன், டிசம்பரில் இருமுறை நடத்தப்பட்டு வந்த இந்தப் படிப்புக்கான தோ்வுகள், இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபா் ஆகிய மாதங்களில் மூன்று முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க