செய்திகள் :

இன்று 10-ஆம் வகுப்பு துத்தோ்வு தொடக்கம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 33,325 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

post image

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 16,932, மாணவிகள் 16,392 மற்றும் மூன்றாம் பாலினத்தவா்-1 உள்பட மொத்தம் 33,325 போ் தோ்வு எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி, தொடா்ந்து ஏப். 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து மாணவ, மாணவிகள் 33,325 போ் தோ்வு எழுத உள்ளனா்.

இந்தத் தோ்வுக்காக திருவள்ளூா் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்டங்களில் 144 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வு மையங்களில் தோ்வுக்கான அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் தயாராக உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமழிசையில் அமைந்துள்ள குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே திருமழிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற குளி... மேலும் பார்க்க

திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து

திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்த... மேலும் பார்க்க