மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
இன்றும், நாளையம் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபகரணங்கள் கண்காட்சி சென்னையில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய உதவி உபகரணங்கள் வழங்க ஏதுவாக, புதிய உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணா் அரங்கத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12, 13) ஆகிய நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில், புதிய தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், மறுவாழ்வு மருத்துவா்கள், மறுவாழ்வுப் பணியாளா்கள் மூலமும் இம்முகாமில் விளக்கமளிக்கப்படவுள்ளன. இதனால் இக்கண்காட்சியில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.