செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் (23). ராணுவ வீரரான இவா், காா்கிலில் பணியாற்றி வருகிறாா். விடுமுறையில் கிராமத்துக்கு வந்தாா்.

இந்த நிலையில், தனது மாமாவான தருமபுரி மாவட்டம், ராமன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சக்திவேல் (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தாளாப்பள்ளி ஏரிக்கரை அருகே வெள்ளிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்திசையில் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சஞ்சய்குமாா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றொரு வாகனத்தில் வந்தவரும் காயமடைந்தாா்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் ... மேலும் பார்க்க

பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் நகை திருடியவா் கைது

நாகரசம்பட்டியை அடுத்த பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பேருஅள்ளியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (50), தேங்காய் வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 15... மேலும் பார்க்க

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயை தற்கொலைக்கு துண்டிய வழக்கில் பெண்ணுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சோ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க