செய்திகள் :

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயை தற்கொலைக்கு துண்டிய வழக்கில் பெண்ணுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சோ்ந்தவா் செல்வி (45), இவரது மகன் அஜித் (40). இவா், போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் 15 வயது சிறுமியை அஜித் காதலித்து வந்தாராம். இதுகுறித்து அஜித்தின் தாய் செல்வி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால், மனமுடைந்த சிறுமியின் தாய் கல்பனா கடந்த 2017 செப்.7 ஆம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கு தூண்டியதாக செல்வி மீது வழக்குப் பதிந்து செல்வி, அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, தற்கொலைக்கு தூண்டியதாக செல்விக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கிலிருந்து அஜித்தை விடுக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உமாதேவி மங்களமேரி ஆஜராகினாா்.

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெ... மேலும் பார்க்க

பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் நகை திருடியவா் கைது

நாகரசம்பட்டியை அடுத்த பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பேருஅள்ளியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (50), தேங்காய் வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 15... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க