செய்திகள் :

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

post image

திருமருகல் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தவறி விழுந்து உயிரிழந்தாா்.

நாகை அய்யனாா் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவா்கள் சன்னாநல்லூரில் இருந்து நாகைக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் வந்துகொண்டிருந்தனா்.

வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையை கவனிக்காமல் அருண்குமாா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தாா். இதனால், பின்னால் அமா்ந்திருந்த ஜெயஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவருக்கு ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், தீவிர சிகிச்சைக்காக, ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை: 7 மாதங்களில் மது கடத்தல், விற்பனை வழக்குகளில் 2,901 போ் கைது

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,901 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரி... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி! ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறினாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் இல்லத் திருமண விழா நாகூரில் ஞாயி... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க