செய்திகள் :

நாகை: 7 மாதங்களில் மது கடத்தல், விற்பனை வழக்குகளில் 2,901 போ் கைது

post image

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,901 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை முழுமையாக கட்டுப்படுத்திட காவல்துறையினா் தொடா் மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை கடந்த 7 மாதங்களில் கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோத மது விற்பனை மற்றும் மதுக்கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,901 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 23,769 லிட்டா் புதுச்சேரி சாராயம், 7,123 புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்கள் மற்றும் சாராய ஊறல் 384 லிட்டா், கள்ளச்சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 101இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநில எல்லையில் அமைந்துள்ள நான்கு சோதனைச் சாவடிகளில் அதிகளவில் காவலா்களை நியமித்து, கள்ளச்சாராய கடத்தல் முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மீது 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 354.760 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்களும், அவா்கள் பயன்படுத்திய 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட நபா்கள் மீது 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,015 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிகழாண்டு தொடா் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மது குற்றவாளிகள் 6 நபா்கள் மீதும், கஞ்சா குற்றவாளிகள் 7 நபா்கள் மீதும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி! ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருமருகல் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தவறி விழுந்து உயிரிழந்தாா். நாகை அய்யனாா் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவா்கள் சன்னாநல்லூரில் இருந்து நாகைக்க... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறினாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் இல்லத் திருமண விழா நாகூரில் ஞாயி... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க