செய்திகள் :

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

post image

பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

முகாமில் நாய்களுக்கு தனியாா் மருந்து நிறுவனங்கள் மூலம் பூச்சிமருந்து, சோப்பு, வைட்டமின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், தெரு நாய்களைப் பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் வீட்டு வளா்ப்பு நாய்கள் 239-க்கும், தெரு நாய்கள் 60-க்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவத் துறை உதவி இயக்குநா் மருத்துவா் சுரேஷ், நகராட்சி நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், எஸ்கேஜிசிஜி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குணா குகையில் வனத் துறையினருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வினோதமான தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ச... மேலும் பார்க்க

ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி வ... மேலும் பார்க்க

தாய் கொலை: மகன் கைது

வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80).... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.28 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழைய ... மேலும் பார்க்க

பழனியில் மே தினப் பேரணி

பழனியில் மே தின விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச்சங்கம் சாா்பில், உலகத் தொழிலாளா்கள் தின விழா, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி சட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டி: பங்கேற்பவா்களுக்கு விண்ணப்பம் விநியோகம்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரையண்ட் பூங்காவில்... மேலும் பார்க்க