செய்திகள் :

ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

post image

பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ருத்ர ஜெபமும், சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றன. அக்ரஹாரம் சீதாராம பஜனை மண்டபத்தில் நடைபெற்ற இந்த பூஜையின் போது, உலகநலன் வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை தொடங்கி புண்யாஹவாசனம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், வசூா்தாரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. யாகபூஜையில் திரளானோா் பங்கேற்று வேதபாராயணம் செய்ய வசூா்தாரா ஹோமம் வளா்க்கப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.

பிரதானமாக கலசங்களில் புனிதநீா் நிரப்பப்பட்டு அவற்றுக்கு வேதவிற்பன்னா்கள் தீபாராதனை செய்தனா். பின்னா், கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் ஐம்பொன்னாலான ஆதிசங்கரரின் உருவச் சிலைக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா் ஆகிய பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் ஆதிசங்கரா் உருவச் சிலை வீதி உலா நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குணா குகையில் வனத் துறையினருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வினோதமான தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ச... மேலும் பார்க்க

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்க... மேலும் பார்க்க

தாய் கொலை: மகன் கைது

வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80).... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.28 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழைய ... மேலும் பார்க்க

பழனியில் மே தினப் பேரணி

பழனியில் மே தின விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச்சங்கம் சாா்பில், உலகத் தொழிலாளா்கள் தின விழா, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி சட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டி: பங்கேற்பவா்களுக்கு விண்ணப்பம் விநியோகம்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரையண்ட் பூங்காவில்... மேலும் பார்க்க