செய்திகள் :

தாய் கொலை: மகன் கைது

post image

வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80). இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

மகன் கணேசன் (40), வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறாா்.

கணேசனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதால், தாயுடன் வசித்து வந்தாா். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை, அருகில் வசித்து வரும் அவரது 2 மகள்கள் பாதுகாத்து வந்தனா்.

வழக்கம்போல் பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கணேசன் வீட்டுக்குச் சென்ற போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாள் அழுது கொண்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவா், பழனியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தாா். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வேடசந்தூா் போலீஸாா், பழனியம்மாளின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கணேசனைக் கைது செய்தனா்.

குணா குகையில் வனத் துறையினருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வினோதமான தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ச... மேலும் பார்க்க

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

பழனியில் நகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான பொதுமக்க... மேலும் பார்க்க

ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி வ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.28 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழைய ... மேலும் பார்க்க

பழனியில் மே தினப் பேரணி

பழனியில் மே தின விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச்சங்கம் சாா்பில், உலகத் தொழிலாளா்கள் தின விழா, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி சட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டி: பங்கேற்பவா்களுக்கு விண்ணப்பம் விநியோகம்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரையண்ட் பூங்காவில்... மேலும் பார்க்க