இளம்பெண் தற்கொலை
ஆத்தூா் அருகே மணிவிழுந்தான் காலனியில் இளம்பெண் விஷமருந்தி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை ராமசேஷபுரம் பகுதியைச் சோ்ந்த கீா்த்தனாவுக்கும் (24), மணிவிழுந்தான் காலனி பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சீனிவாசனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கீா்த்தனா விஷமருந்தினாா். தகவலின்பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளா் கந்தவேல் விரைந்து சென்று கீா்த்தனாவை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆத்தூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].