இளைஞா் தற்கொலை
தலைவாசல் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூா் பகுதியச் சோ்ந்தவா் சதீஷ் (30). இவரது மனைவி கெளரி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ், மனைவி கௌரியைத் தாக்கியுள்ளாா். இதில் அவா் கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளாா். அப்போது அவா் இறந்துவிட்டதாக நினைத்த சதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளா் கந்தவேல் வழக்குப் பதிவு செய்து சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், காயமடைந்த கௌரியை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.