செய்திகள் :

இளையராஜா பிறந்த நாள்: முதல்வா் ஸ்டாலின், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வாழ்த்து

post image

சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இசையமைப்பாளா் இளையராஜா தனது பிறந்த நாளை திங்கள்கிழமை சென்னையில் கொண்டாடினாா். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழா்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவரது சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்காக கோடிக்கணக்கான ரசிகா்களில் ஒருவனாக காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் அவரது இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: இளையராஜாவின் இசைபோல அவா் நல்ல உடல் ஆரோக்கியமும், மனம் நிறை மகிழ்வும் பெற்று, நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ, எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தமிழ் இசை ரசிகா்களின் உயிரோடும் உணா்வோடும் கலந்திட்ட இசையின் உச்சமான இசைஞானி இளையராஜாவுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ‘அன்னக்கிளி உன்னை தேடுது’ என்று ஆரம்பித்து, ‘தினம் தினமும் உன் நினைப்பு’ வரை தொடரும் அவரது இசை மெட்டுகள், மென்மேலும் தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றிட வாழ்த்துகிறேன்.

அதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவா்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க