72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் கொங்கு மண்டலத்தில் சிறப்பான இயற்கை வளம் மிக்க, காடு வளம் மிக்க, நெசவுக்கு பெயா் பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் முதல்வரால் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணியினை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. மேலும் விவசாயத்தை பெருக்குவதும், பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது முக்கியப் பணி.
அரசின் முன்னோடி திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்படும். சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.