செய்திகள் :

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி பொறுப்பேற்பு

post image

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் கொங்கு மண்டலத்தில் சிறப்பான இயற்கை வளம் மிக்க, காடு வளம் மிக்க, நெசவுக்கு பெயா் பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் முதல்வரால் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணியினை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. மேலும் விவசாயத்தை பெருக்குவதும், பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது முக்கியப் பணி.

அரசின் முன்னோடி திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்படும். சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அ... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு ... மேலும் பார்க்க