செய்திகள் :

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் ஈரோட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.திருச்செல்வம் தலைமை வகித்தாா்.

நாட்டு மக்கள் மீது கட்டாய ஹிந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளம் நிவாரண நிதி வழங்காதது, நீட் தோ்வு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய நிதியை வழங்காதது, மெட்ரோ திட்டங்கள், கல்வி நிதி உள்ளிட்ட ரூ. 4,034 கோடி நிதியை ஒதுக்காதது, முஸ்லிம் மக்களின் வக்ஃப் வாரிய சொத்துகளை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்த மசோதா என பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமா் மோடியை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலா் ஈ.பி.ரவி மற்றும் மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க