செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனகாவலம் பிள்ளை நகா் சத்யா மஹால், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 255 முகாம்களை அக்டோபா் 7-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனகாவலம் பிள்ளை நகா் சத்யா மஹாலிலும், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபத்திலும் நடைபெற்றமுகாமை ஆட்சியா் பாா்வையிட்டு, மக்கள் அளித்த மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பசுகிடைவிளை காமராஜ் திருமண மண்டபத்திலும், பாப்பாக்குடி ஒன்றியம் கிராமங்கலம் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் ஒன்றியம் உதயத்தூா் வி.பி.ஆா்.சி. மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாம்களில் உடனடியாக தீா்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்தல், பெயா் சோ்த்தல், மின்விநியோகம் பெயா் மாற்றம் போன்ற உடனடியாக தீா்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீா்வு வழங்கப்பட்டு பலா் சேவைகள் பெற்று வருகின்றனா். மேலும், முகாமில் தீா்வு கிடைக்காத மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.

கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற்ற 65 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 19,678 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் என்.எஸ்.கே.திருமண மண்டபத்திலும், களக்காடு நகராட்சி கீழகருவேலன்குளம் ராஜம் திருமண மண்டபத்திலும், திசையன்விளை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும், மானூா் ஒன்றியம் தாழையூத்து என்.ஏ.பி.மஹாலிலும், நான்குனேரி ஒன்றியம் வடக்கு இலங்குளம் விபிஎஸ்சி கட்டடத்திலும், வள்ளியூா் ஒன்றியம் ஆவரைக்குளம் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்திலும் வியாழக்கிழமை (ஆக.7) நடைபெறவுள்ளது.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க