திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் 50,000 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகைக்காக அளிக்கப்பட்டுள்ளன.
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’”என்ற திட்டத்தை, சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீா்வு அளிக்கக் கூடிய அம்சங்களில் தீா்வு காணப்பட்டு வருகிறது. பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சான்றும் வழங்கப்படுகிறது.
மேலும், மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் இந்த முகாமில் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கி வருகின்றனா்.
ஒரே நாளில் 1.25 விண்ணப்பங்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 1.25 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், மகளிா் உரிமைத் தொகை கேட்டு மட்டும் 50,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.