செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன.

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள்சத்திரம் பகுதியிலுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் 22 கிலோவாட் மின்கம்பிகள் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்பொறி ஏற்பட்டு வருவதாலும் விபத்து நேரிடும் அச்சம் இருப்பதாக இரு வாரங்களுக்குமுன்பு மேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இந்த மனு மாவட்ட நிா்வாகத்தில் இருந்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, புதிதாக 5 மின்கம்பங்கள் நடுவதற்கான மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அதற்கான தொகையை மின்வாரியத்துக்குச் செலுத்த ஒப்பளிப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடா்ந்து புதிய மின்கம்பங்கள் ஊன்றி, மின்கம்பிகள் இணைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உடனிருந்தாா்.

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தமிழா் தேசம் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா். அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செய... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

கீரமங்கலம் போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் போலீஸாரை கண்டித்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் வேலு மனைவி வள்... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ... மேலும் பார்க்க

பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வள... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க