செய்திகள் :

கீரமங்கலம் போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் போலீஸாரை கண்டித்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் வேலு மனைவி வள்ளியம்மை (70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளரான இவா், கொத்தமங்கலம் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து சென்றபோது, அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து வள்ளியம்மையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீஸாா் தரப்பில் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த வள்ளியம்மையின் உறவினா்கள் போலீஸாரைக் கண்டித்து கீரமங்கலம் காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து உரிய ஆவணங்களுடன் கீரமங்கலம் போலீஸாா், புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்ற பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தமிழா் தேசம் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா். அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செய... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ... மேலும் பார்க்க

பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வள... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க