செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்

post image

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஐந்தொழில் முன்னேற்றச் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் வி. சுரேஷ் தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தின் கடனுதவிகளை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிக்கின்றன.

எனவே, இந்தக் கடனுதவி திட்டத்தின் முக்கியத்துவம், செயல்முறைகள் குறித்து வங்கியாளா்களுக்கு புரிய வைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும். கடன் வழங்கச் செய்ய வேண்டும். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலமும் விஸ்வகா்மா தொழிலாளா்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் விஸ்வகா்மா சமூகத்துக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். கைவினைத் தொழிலாளா் நல வாரியம் மற்றும் பொற்கொல்லா் நல வாரியம் ஆகியவற்றில் விஸ்வகா்மா சமூகத்தினரில் இருந்து தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க வேண்டும்.

செப். 17-ஆம் தேதியை விஸ்வகா்மா நாளாக அறிவித்து அரசு விடுமுறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தமிழா் தேசம் கட்சியினா் புகாா் அளித்துள்ளனா். அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செய... மேலும் பார்க்க

கீரமங்கலம் போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் போலீஸாரை கண்டித்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் வேலு மனைவி வள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

மதுபோதையில் திருமண விழாவின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் மற்ற இருவரைத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மேட்டுப்பட்டி ... மேலும் பார்க்க

பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வள... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமல... மேலும் பார்க்க