செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: சென்னை மாநகராட்சியில் 6 நாள்களில் 77,266 மனுக்கள்

post image

சென்னை மாநகராட்சியில் கடந்த 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 36 வாா்டுகளில் இருந்து 77,266 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் 44,997 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் தலா 6 வாா்டுகள் வீதம் 6 நாள்களில் 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 77,266 போ் மனுக்களை அளித்துள்ளனா். அந்த மனுக்களில் 44,997 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனுக்கள் கொடுத்துள்ளனா்.

பல்வேறு அரசுத் துறை சாா்ந்த மனுக்களில், 457 மனுக்களுக்கு முகாம்களில் உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வியாழக்கிழமையும் அடையாறு, திருவெற்றியூா், மணலி, கோடம்பாக்கம், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த மொத்தம் 6 வாா்டுகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் மனுக்களை அளித்தனா். ஆலந்தூா் மண்டலத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டாா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க