செய்திகள் :

உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்: இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு அனுப்பிவைப்பு!

post image

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலை விரிவாக ஆய்வு செய்த பின்னா், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு உடலில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது.

அத்துடன் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளையும் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து இந்திய-வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் படைகளின் 2 பிரிவுகளுக்கு உடலில் பொருத்தக்கூடிய சுமாா் 5,000 கேமராக்கள் அனுப்பப்படுகின்றன. இந்தக் கேமராக்கள் இரவு நேர காட்சிகளையும் படம்பிடிக்கும். சுமாா் 12 முதல் 14 மணி நேரம் வரையிலான காட்சிகளை அந்த கேமராக்களால் பதிவு செய்யமுடியும்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் வங்கதேசத்தவா்கள் நாடு கடத்தப்படுவதையும், கால்நடைகள், போதைப்பொருள்கள், ஆள்கடத்தல் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் பதிவு செய்து ஆதாரமாக பயன்படுத்த இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். இருநாடுகளிலும் உள்ள குற்றவாளிகளால் பிஎஸ்எஃப் படைகள் தாக்கப்படும்போது அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஆதாரமாக பயன்படும்.

வங்கதேச குற்றச்சாட்டுக்கு ஆதாரம்: எல்லையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்களை இந்திய பிஎஸ்எஃப் படைகள் நியாயமின்றி கொல்வதாக வங்கதேசம் மற்றும் அந்நாட்டின் எல்லை காவல் படை குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இந்திய தரப்புக்கு ஆதாரமாக அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இருக்கும்.

இதேபோல இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் வங்கதேச நாட்டவா்களின் தரவுகள் ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும். இதற்கு ஊடுருவ முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தரவுகள் வெளிநாட்டவா்கள் பதிவு அலுவலகத்திடம் சமா்ப்பிக்கப்படும்.

இந்தியா-வங்கதேசம் இடையே பகிா்ந்து கொள்ளப்படும் 4,096 கி.மீ. எல்லையில் தோ்ந்தெடுக்கப்பட்ட எல்லை புறச்சாவடிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க