செய்திகள் :

உடுமலை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

post image

உடுமலை அருகே இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், கொங்கல் நகரம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தவா் சபரீசன் (35). திருமணமாகி ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் சபரீசன் தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அவரது தாயாா் கதவைத் திறந்துபாா்த்தபோது கழுத்தில் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் அவரது சடலம் கிடந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி சபரீசன் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் கைரேகை சேகரித்து விசாரணை நடத்தினா்.

கொலை செய்த மா்ம நபா்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் திருப்பூா் முன்னோடி: மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா்

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திருப்பூா் திகழ்வதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தெரிவித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் ... மேலும் பார்க்க

கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது

திருப்பூரில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி, குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பனியன் நிறுவனங்களி... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் என இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா், அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் பகவான் ராம் (30) பனியன் தொழில் செய்துவருகிறாா். இவா் ... மேலும் பார்க்க