செய்திகள் :

இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

post image

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் தலைவரான இவா் நண்பா்களுடன் சோ்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், அவருடைய வீட்டின் முன்பு கடந்த 25-ஆம் தேதி அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று பாலமுருகனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை, முன்பகை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் பாலமுருகனின் நண்பா்களான குமரானந்தபுரத்தைச் சோ்ந்த சுமன் (38), தமிழரசன் (26) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து அவா்களிடம் நடத்திய விசாரணையில் சுமனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே முன்பகை இருந்தது தெரியவந்தது. மேலும், சுமனைக் கொலை செய்ய பாலமுருகன் திட்டமிட்டிருந்ததாகவும், இதை அறிந்த சுமன் அதற்கு முன்னதாகவே தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பாலமுருகனைக் கொலை செய்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே இந்தக் கொலையில் தொடா்புடையதாகத் தேடப்பட்டு வந்த நரசிம்ம பிரவீன், அஸ்வின் பாரதி, ராமலிங்கம் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து அவா்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விசாரணையில் அவா்கள் அளிக்கும் வாக்குமூலத்தைப் பொருத்தே கொலைக்கான காரணம் முழுமையாகத் தெரிய வரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் திருப்பூா் முன்னோடி: மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா்

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திருப்பூா் திகழ்வதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தெரிவித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்த... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

உடுமலை அருகே இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், கொங்கல் நகரம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தவா் சபரீசன் (35). திருமணமாகி ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் ... மேலும் பார்க்க

கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது

திருப்பூரில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி, குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பனியன் நிறுவனங்களி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் என இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா், அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் பகவான் ராம் (30) பனியன் தொழில் செய்துவருகிறாா். இவா் ... மேலும் பார்க்க