செய்திகள் :

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் திருப்பூா் முன்னோடி: மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா்

post image

தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திருப்பூா் திகழ்வதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தெரிவித்தாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் திருப்பூா் தொழில் துறையினரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, நியூ திருப்பூா் பகுதியில் அமைந்துள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு தொழிலாளா்களை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடி அவா்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தொழில் துறை சாா்ந்த சங்கங்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியம் பேசுகையில், திருப்பூரில் நிலவும் தொழிலாளா் பற்றாக்குறைக்குத் தீா்வு காண வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவா்களுக்கான குடியிருப்பு வசதிகளை மத்திய அரசு உறுதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பேசுகையில், கடந்த நிதியாண்டில் திருப்பூா், அருகிலுள்ள நகரங்களை இணைத்து பின்னலாடைகளின் ஏற்றுமதி ரூ.45,000 கோடியை எட்டியுள்ளது, இது இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் ஆகும். நிகழாண்டில் பின்னலாடைகளின் ஏற்றுமதி ரூ.50,000 கோடியைக் கடக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா பேசியதாவது: திருப்பூா் தொழில் துறையினா் வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பிரதமா் மற்றும் சக அமைச்சா்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீா்வு காணப்படும். திருப்பூரில் நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் முறை வியப்பளிக்கிறது. இது இந்தியாவுக்கே முன்மாதிரியான செயல்பாடாக உள்ளது.

வெளிநாடுகளுடன் வா்த்தகம் மேற்கொள்ள அனைத்து வகையான உதவிகளையும் செய்ய மத்திய வெளியுறவுத் துறை தயாராக உள்ளது. பிரிட்டனுடனான வரி இல்லா வா்த்தக ஒப்பந்தம் நல்ல முறையில் அமைந்ததுபோல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவை கையொப்பமாகும்பட்சத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்றாா்.

தொடா்ந்து ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள சாய ஆலைகளின் சுத்திகரிப்பு நிலையங்களையும் அவா் ஆய்வு செய்தாா்.

உடுமலை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

உடுமலை அருகே இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், கொங்கல் நகரம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தவா் சபரீசன் (35). திருமணமாகி ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் ... மேலும் பார்க்க

கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது

திருப்பூரில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி, குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பனியன் நிறுவனங்களி... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் என இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா், அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் பகவான் ராம் (30) பனியன் தொழில் செய்துவருகிறாா். இவா் ... மேலும் பார்க்க