செய்திகள் :

உத்தமபாளையம்: இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

இதில் நடுமாடு, கரிச்சான் சிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

நூற்றுக்கும் அதிகமான ஜோடி மாடுகளுடன் கலந்து கொண்டனர். கோம்பை முதல் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு வரையில் சென்று திரும்புவகையில், எல்லை பந்தயம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தைய போட்டி, திடீரென கோம்பைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டியில் கலந்துகொண்ட மாடுகளுக்கு பின்னால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியபடி மாடுகளை பந்தயத்தில் வேகமாக செல்ல வைத்தனர். இதனால் பல இடங்களில் மாடுகள் தங்கள் வழிதவறி சாலை ஓரத்துக்கு சென்றனர் .

இதில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்கள் முறைகேடு செய்ததாக பிற மாட்டின் உரிமையாளர்கள் விழாக் குழுவினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதற்கு போட்டி விதிகளை மீறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது என விழாக் குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

Theni Double Bullock Cart Race

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

சென்னை: விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் மன்னிப்புக் கோரினார்.விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை பின... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:"ஏற்கெனவே பல்வேறு மாநில... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.தமிழக மாணவா்களுக்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்... மேலும் பார்க்க

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை... மேலும் பார்க்க