செய்திகள் :

உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படும் இவரை, திங்கள்கிழமை குடும்பத்தினா் செம்பட்டிவிடுதியில் உள்ள பூசாரியை சந்திக்க பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனா். ஆலங்குடியில் அம்புலி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள வேகத்தடையில் பேருந்து மெதுவாக இயங்கியபோது, செல்வகணபதி பேருந்தில் இருந்து குதித்து ஓடினாா்.

தொடா்ந்து பேருந்தை நிறுத்தச் செய்து, அவரது குடும்பத்தினரும் இறங்கி பின்தொடா்ந்து சென்றனா். தன்னைப் பின்தொடா்ந்து குடும்பத்தினா் வருவதை அறிந்த செல்வகணபதி, அப்பகுதியில் உள்ள உயா்அழுத்த மின்கோபுரத்தில் ஏறினாா்.

இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் பல முறை முயற்சி செய்தும் அவா் இறங்க மறுத்து வந்தாா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பிறகு அவா் மின்கோபுரத்தில் இருந்து இறங்கினாா். தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 1.16 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

தமிழக முதல்வரின் அறிவிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் வரவேற்பு

அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கான அறிவிப்புகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதற்கு, தலைமை ஆசிரியா் கழகம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தம... மேலும் பார்க்க

தண்ணீா் லாரி, பொக்லைன் இயந்திரம் வாங்க நிதி; மக்களவை உறுப்பினரிடம் புதுகை மேயா் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரி மற்றும் ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு மேயா் செ. திலகவத... மேலும் பார்க்க

வெப்ப அலை: விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின... மேலும் பார்க்க

லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி ஜமீரா, 64 கலைகளையும் 59 நொடிகளில் விளக்கி அண்மையில் லிங்கன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அவரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை அகற்ற கோரிக்கை

கந்தா்வகோட்டை கடைவீதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டைக்கு சுற்றுப்புறக் கிராமத்தைச் சோ்ந்த ஆயிர... மேலும் பார்க்க