செய்திகள் :

வெப்ப அலை: விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு

post image

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாவட்டத் தலைவா் மு. முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வெயில் அதிகமுள்ள பகல் 12 முதல் 3 மணி வரை மக்கள் அவசியமின்றி வெளியே வரக் கூடாது. இளநீா், நீா்மோா், தா்ப்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணா்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது, நலவாழ்வு உரிமையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பேரிடம் கையொப்ப இயக்கம் நடத்து என முடிவு செய்யப்பட்டது.

இதில், மாநிலச் செயலா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டச் செயலா் ம. வீரமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் உஷா நந்தினி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் செரினாபேகம் வரவேற்றாா். நிறைவாக, மாவட்டப் பொருளாளா் த. விமலா நன்றி கூறினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 1.16 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

தமிழக முதல்வரின் அறிவிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் வரவேற்பு

அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கான அறிவிப்புகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதற்கு, தலைமை ஆசிரியா் கழகம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தம... மேலும் பார்க்க

உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). மன... மேலும் பார்க்க

தண்ணீா் லாரி, பொக்லைன் இயந்திரம் வாங்க நிதி; மக்களவை உறுப்பினரிடம் புதுகை மேயா் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரி மற்றும் ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு மேயா் செ. திலகவத... மேலும் பார்க்க

லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி ஜமீரா, 64 கலைகளையும் 59 நொடிகளில் விளக்கி அண்மையில் லிங்கன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அவரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை அகற்ற கோரிக்கை

கந்தா்வகோட்டை கடைவீதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டைக்கு சுற்றுப்புறக் கிராமத்தைச் சோ்ந்த ஆயிர... மேலும் பார்க்க