செய்திகள் :

தமிழக முதல்வரின் அறிவிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் வரவேற்பு

post image

அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கான அறிவிப்புகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதற்கு, தலைமை ஆசிரியா் கழகம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் விதி எண்110இன் கீழ் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான 9 அறிவிப்புகள் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இதில், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பை பணமாக்கும் சலுகை மீண்டும் அக். 1 முதல் வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. அரசுப் பணியாளா்களின் குழந்தைகள் உயா்கல்வி பயில ரூ. ஒரு லட்சம் முன்பணம் வழங்கப்படும். அரசு ஊழியரின் திருமணத்துக்கு முன்பணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கம் குறித்தும் கரோனா காலத்தில் 24 மாத காலம் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்குவது குறித்தும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 47 ஆண்டுகளாக பதவி உயா்வு இல்லாத நிலை குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றாா் தங்கமணி.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு 16 லட்சம் ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு பயன்தரும் அறிவிப்பாகும். மிக முக்கியமாக பழைய ஓய்வு திட்டத்துக்காக அமைக்கப்பட்ட குழுவின் கால அளவைக்குறைத்து செப்டம்பா் மாதத்திற்குள் அதன் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 1.16 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). மன... மேலும் பார்க்க

தண்ணீா் லாரி, பொக்லைன் இயந்திரம் வாங்க நிதி; மக்களவை உறுப்பினரிடம் புதுகை மேயா் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரி மற்றும் ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு மேயா் செ. திலகவத... மேலும் பார்க்க

வெப்ப அலை: விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின... மேலும் பார்க்க

லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி ஜமீரா, 64 கலைகளையும் 59 நொடிகளில் விளக்கி அண்மையில் லிங்கன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அவரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை அகற்ற கோரிக்கை

கந்தா்வகோட்டை கடைவீதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டைக்கு சுற்றுப்புறக் கிராமத்தைச் சோ்ந்த ஆயிர... மேலும் பார்க்க