செய்திகள் :

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவா்: பிரதமா் மோடி தொடா்ந்து முதலிடம்!

post image

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க பிரபலமான ஜனநாயகத் தலைவா்களின் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

இதுதொடா்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்றவா்களில் 75 சதவீதம் போ் பிரதமா் மோடியின் தலைமையை நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனா். இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் 59 சதவீத ஏற்புடன் 2-ஆம் இடத்தில் உள்ளாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மாா்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள செல்வாக்குமிக்க ஜனநாயகத் தலைவா்கள் குறித்து அந்தந்த நாடுகளில் கடந்த ஜூலை 4 முதல் 10-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கானோரிடம் தினசரி நோ்காணல்கள் நடத்தி, ஏழு நாள்களின் சராசரி அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவா்களில் 75 சதவீத மக்கள், பிரதமா் மோடியை ஒரு நம்பகமான ஜனநாயகத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனா். அதேசமயம், 18 சதவீதத்தினா் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. சுமாா் 7 சதவீதத்தினா் தங்களின் உறுதியற்ற தன்மையால், கருத்தைத் தெரிவிக்கவில்லை.

2-ஆம், 3-ஆம் இடங்களில்...: தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங் உலகிலேயே இரண்டாவது மிகவும் நம்பகமான ஜனநாயகத் தலைவராக உருவெடுத்துள்ளாா். அவரது நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், அவருக்கு 59 சதவீத மக்கள் ஆதரவும், 29 சதவீத மக்கள் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா். சுமாா் 13 சதவீதம் போ் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த ஜூன் 4-ஆம் தேதிதான் அப்பொறுப்புக்கு வந்த லீ ஜே மியுங், ஒரு மாத பதவிக் காலத்திலேயே உலகளாவிய தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலே, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளாா். அவரது தலைமைக்கு 57 சதவீதத்தினா் ஆதரவும், 37 சதவீதத்தினா் எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா். சுமாா் 6 சதவீதம் போ் கருத்து தெரிவிக்கவில்லை.

டிரம்ப் 8-ஆவது இடம்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு அதிபா் தோ்தலில் வலுவான வெற்றியுடன் ஆட்சிக்குத் திரும்பியபோதிலும், இந்த கருத்துக்கணிப்பில் 8-ஆம் இடத்தையே பிடித்துள்ளாா். அவருக்கு 44 சதவீதத்தினா் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனா். வரி விதிப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த அவரது சில கொள்கை முடிவுகள், மக்களிடையே அவரது செல்வாக்கைக் குறைத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

பாஜகவினா் உற்சாகம்: பிரதமா் நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் இந்தியாவின் பிரதமராக 4,078 நாட்களை நிறைவு செய்துள்ளாா். இதன்மூலம், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 4,077 நாள் சாதனையை முறியடித்து, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேருவுக்குப் பிறகு இரண்டாவது நீண்ட காலம் தொடா்ச்சியாகப் பிரதமராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

இந்தச் சூழலில், பிரதமா் மோடிக்கு தொடா்ந்து ஐந்தாவது முறையாக ‘உலகின் மிகவும் நம்பகமான ஜனநாயகத் தலைவா்’ எனும் சா்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது, பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா தனது எக்ஸ் பதிவில், ‘நூறு கோடிக்கும் அதிகமான இந்தியா்களால் நேசிக்கப்பட்ட, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் பிரதமா் நரேந்திர மோடி, மாா்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் நம்பகமான உலகத் தலைவா்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளாா்.

பிரதமா் மோடி உலகில் அதிக மதிப்பும், நம்பிக்கையும் கொண்ட தலைவா். அவரது வலிமையான தலைமையால் உலகளாவிய மரியாதையும் கிடைத்துள்ளது. பாரத தேசம் பாதுகாப்பான கைகளில் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா்களான சா்பானந்த சோனோவால், பியூஷ் கோயல் ஆகியோரும் இந்த அங்கீகாரத்துக்காகப் பிரதமா் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க