குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
உழவா் சந்தைகளில் ரூ. 1.29 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
ஆனி மாத அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் புதன்கிழமை ரூ. 1.29 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
அந்த வகையில், ஆனி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் புதன்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காக தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.
பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாயின. இதேபோல, சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,102 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 74,095 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன் மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.