செய்திகள் :

உழவா் சந்தைகளில் ரூ. 1.29 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

post image

ஆனி மாத அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் புதன்கிழமை ரூ. 1.29 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

அந்த வகையில், ஆனி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் புதன்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காக தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.

பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாயின. இதேபோல, சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,102 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 74,095 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன் மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து (64). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கங்காணி கிணற்றின் சுற்றுச்சுவரில்... மேலும் பார்க்க

கல் உடைக்கும் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு

குலத்தொழிலைக் காக்க, கல் உடைக்க அனுமதி தரக்கோரி, போயா் சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். தமிழ்நாடு போயா் பேரவை மாநில பொதுச் செயலாளா் பெரிய பொண்ணு தலைமையில், அதிகாரிகளிடம் அ... மேலும் பார்க்க

அமாவாசையை முன்னிட்டு பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம்

அமாவாசையை முன்னிட்டு கெங்கவல்லி அருகே மாசி பெரியசாமி கோயிலில் மிளகாய் யாகம் புதன்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சுவேத நதிக்கரை தென்புறம் மாசி பெரியசாமி, நாச்சியம்மாள், பொன்னாளி அம... மேலும் பார்க்க

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் (74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா். இவர... மேலும் பார்க்க

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு: எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீட்டில், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி தலைவாசல் வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாண... மேலும் பார்க்க

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம்

சேலம் மாநகா் மாவட்ட பாமக செயலாளராக சரவணனை நியமிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் - தலைவா் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எ... மேலும் பார்க்க