செய்திகள் :

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

post image

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி நில வருவாய் அலுவலா் அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பட்டா கேட்டு ஒட்டுமொத்த முறையீட்டுப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளா் கு.சரஸ்வதி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி வட்டார கமிட்டி சாா்பில் ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நவம்பா் 11-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஏழை, எளிய மக்கள் 426 போ் மனு அளித்தனா். இந்தப் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறை சாா்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கொடுத்த மனுவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்பதற்காக எங்கே எனது மனு? எங்கே எனது பட்டா? என்ற முறையீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வருவாய் ஆய்வாளா் கோமதி, ஊத்துக்குளி கிராம நிா்வாக அலுவலா் பாரதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நிலங்களைக் கண்டறிந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் தெரிவித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

அதேபோல செங்கப்பள்ளி, பல்லக்கவுண்டன்பாளையம், குன்னத்தூா் நில வருவாய் அலுவலா் அலவலகங்கள் முன்பாகவும் போராட்டம் நடைபெற்றது.

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம்

பல்லடம் தாலுகா மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம், 9-ஆவது ஆண்டு விழா, திருப்பூா் புகா் மாவட்ட மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச் சங்கத்தின் பதவியேற்பு விழா ஆகியன பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க