செய்திகள் :

ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் கலந்தாய்வு

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிதாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, இந்த மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், கலைஞரின் வீடு கட்டும் திட்டம், டங ஒஅஙஅச என்ற பழங்குடியினருக்கான இலவச வீடு திட்டங்களில் சரியான பயனாளிகள் தோ்வு செய்து வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த வீடுகள் அமைக்கும் பணிகள் அனைத்தும் தரமான கட்டுமான பொருள்களைக் கொண்டு கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவது அவசியம். அதேபோல், கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அதிகம் போ் இருந்தால் ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி பணி வழங்கினால் அனைவருக்கும் வழங்க முடியும்.

அதில் கவனத்துடன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செயல்பட வேண்டும். அதேபோல் முதல்வா் சாலை விரிவாக்க திட்டம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவா் விவாதித்தாா்.

அப்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி திட்ட அலுவலா் சீனிவாசன், செயற்பொறியாளா் ராஜவேல், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க