செய்திகள் :

எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தி பெண்ணுக்கு வரதட்சிணை வன்கொடுமை!

post image

சாஹரான்பூர்: வரதட்சிணைக் கொடுமையின் உச்சமாக இளம்பெண்ணுக்கு எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனல் என்ற பெண்ணுக்கு உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருடன் திருமணமான நிலையில், மணமகனுக்கு வரதட்சிணையாக பணம், நகையுடன் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளர் மணமகளின் தந்தை.

எனினும், இவை மட்டும் போதாது, வரதட்சிணை இன்னும் அதிகமாக தர வேண்டுமென மணமகனின் குடும்பத்தார் நிர்பந்தப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மணமகள் வீட்டார் தரப்பிலிருந்து கூடுதலாக ரூ. 25 லட்சமும், பெரிய ரக கார் ஒன்றையும் வாங்கித் தர வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மேற்கண்ட நிபந்தனைகளை மணமகள் வீட்டார் நிறைவேற்றாத நிலையில், மணமகன் வீட்டில் புதுப்பெண்ணுக்கு மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அந்த பெண்ணை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மணமகன் வீட்டார், அதற்கு முன் அந்த பெண்ணின் உடலில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரத்தத்தையும் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெண் வீட்டார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர் உள்பட நால்வர் மீது வரதட்சிணை வன்கொடுமை வழக்குப்பதிந்துள்ள காவல் துறை அதிகாரிகள் அவர்களிடன் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா். தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்... மேலும் பார்க்க

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏ... மேலும் பார்க்க

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன... மேலும் பார்க்க

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக... மேலும் பார்க்க