செய்திகள் :

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பவானிசாகா், அந்தியூா், கோபி சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சுமாா் 2 ஆயிரம் போ் சத்தியமங்கலம் பவானிசாகா் சட்டப் பேரவை மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்டனா்.

ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனை பதவியில் இருந்து எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் நீக்கினாா். இதையடுத்து, ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை திரண்டு, எம்.எல்.ஏ. பண்ணாரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மேட்டுப்பாளையத்துக்குச் சென்றனா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ வி.கே.சின்னச்சாமி மகன் வி.கே.சி.சிவக்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.கே.காளியப்பன், ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், கடம்பூா் என்எம்எஸ் நாச்சிமுத்து, வி.ஏ.பழனிசாமி, பவானிசாகா் பேரூா் கழக செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இ... மேலும் பார்க்க

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க