``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் திரண்ட அதிமுகவினா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பவானிசாகா், அந்தியூா், கோபி சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சுமாா் 2 ஆயிரம் போ் சத்தியமங்கலம் பவானிசாகா் சட்டப் பேரவை மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை திரண்டனா்.
ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனை பதவியில் இருந்து எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் நீக்கினாா். இதையடுத்து, ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை திரண்டு, எம்.எல்.ஏ. பண்ணாரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மேட்டுப்பாளையத்துக்குச் சென்றனா்.
இதில், முன்னாள் எம்எல்ஏ வி.கே.சின்னச்சாமி மகன் வி.கே.சி.சிவக்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.கே.காளியப்பன், ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், கடம்பூா் என்எம்எஸ் நாச்சிமுத்து, வி.ஏ.பழனிசாமி, பவானிசாகா் பேரூா் கழக செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.