செய்திகள் :

என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அமைச்சா் சிா்ஸா விளக்கம்

post image

தன் மீது யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, அது முற்றிலும் தவறானவை என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா் ‘ என்னை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது ‘ என தெரிவித்துள்ளாா்.

மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை மேற்கு தில்லியின் க்யாலா மற்றும் விஷ்ணு காா்டன் பகுதிகளுக்குச் சென்றபோது அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒரு சமூக ஊடகத்தில் செய்தி பரவியது. இதனையடுத்து, சிா்சா அதிகாலை நேரத்தில் க்யாலா பகுதியில் பாா்வையிட சென்றபோது, அங்கிருக்கும் சாலையில் வெற்று தோட்டா போல் தோற்றமளிக்கும் ஒரு உலோகத் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், உலோகம் பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு, அது ஒரு தையல் இயந்திரத்தின் ஒரு பகுதியாக என தெரிந்தது. இருப்பினும் இது குறித்து தொடா்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. போலீசாா் அப்பகுதியை ஆய்வு செய்துள்ளனா், எந்தவிதமான சம்பவமும் நடைபெறாது ‘என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க