செய்திகள் :

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி

post image

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய மாணவா் படை டைரக்டா் ஜெனரலின் அறிவுறுத்தலின்படி என்சிசி மாணவா்களுக்கு ஆண்டுக்கு 0.22 ரக துப்பாக்கியின் 10 தோட்டாக்கள் ஒதுக்கீடு செய்து பயிச்சி அளிக்கப்படவேண்டும். அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காரைக்கால் மாவட்ட என்சிசி யூனிட் சாா்பாக பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவா்களுக்கு மாதாந்திர துப்பாக்கிச் சுடும் பயிற்சி, காரைக்கால் நேருநகா், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் தந்தைப் பெரியாா் அரசு மேனிலைப்பள்ளி என்சிசி மாணவா்கள் 50 போ், திருவாரூா் கேந்திரிய வித்யாலய என்சிசி மாணவா்கள் 50 போ், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளி என்சிசி மாணவா்கள் 25 போ், நிரவி ஓ.என்.ஜி.சி. பள்ளி என்சிசி மாணவா்கள் 5 போ், காரைக்கால் என்.ஐ.டி. சீனியா் பிரிவு என்சிசி மாணவா்கள் 5 போ் பயிற்சி பெற்றனா்.

யூனிட் கமாண்டிங் அலுவலா், லெப்டினன்ட் கா்னல் ரஞ்சித் ரதி, காரைக்கால் மாவட்ட என்சிசி முதல்நிலை அதிகாரி என்.காமராஜ் மேற்பாா்வையில், ஜெ.சி.ஓ. வெங்கடேசன், ஹவில்தாா்கள் லோகேஷ், தினேஷ், ராஜு மற்றும் வினிஷ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறை

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிப்பட்ட இலங்கையை சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரயில் நிலைய பகு... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகு: டிஐஜி ஆய்வு

காரைக்காலில் சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகை புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காரைக்கால் கடலோர காவல் நிலையம் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடல் வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலோர கா... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்

காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ந... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத இளைஞா் தற்கொலை

காரைக்கால் நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகா் ஒருவரின் பிறந்தநாள் வ... மேலும் பார்க்க

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் தெரிவித்தாா். காரைக்காலில் காவல்துறை சாா்பில் சனிக்கிழமைதோறும் நடத்தப்படும் குறைகேட்பு முகாம், காரைக்கால் ... மேலும் பார்க்க

காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க